நிச்சயமற்ற மழை

மழை குறித்த சரியான, துல்லியமான தகவல்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்

June 01, 2023 11:00 am | Updated 11:00 am IST

இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ஏப்ரல் மாதத்திலிருந்து பருவ மழை எப்படியிருக்கும் என்பது குறித்த தகவல்களை இந்த வார தொடக்கத்தில் வெளியிட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் நம்பியிருக்கும் வானிலை மாதிரிகளின் சமீபத்திய பகுப்பாய்வை வைத்துப் பார்க்கும் போது, எல் நினோ உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. எல் நினோ என்பது மத்திய பசிபிக்கில் வெப்பமயமாதலின் ஒரு சுழற்சி நிகழ்வு. 10 ஆண்டுகளில் ஆறு எல் நினோ நிகழ்வுகள், மத்திய இந்தியாவின் மேற்கு, வடமேற்கு, மத்திய இந்தியாவின் மேற்கு பகுதிகளில், குறிப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் மழைப் பொழிவு குறைவதோடு தொடர்புடையது. ஆனால், எல் நினோ உருவாவது உறுதியாக இருந்தாலும், ‘சாதாரண’மாகவே பருவமழை பெய்யும் என்ற பார்வையையே தக்கவைத்துக் கொள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் முடிவு செய்திருக்கிறது. அதாவது, 50 ஆண்டு காலத்தில் பெய்த மழையின் சராசரி அளவான 87 செ.மீ.யில் 96 சதவீதம் அளவுக்கு மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. 96 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், ‘இயல்பை விடக் குறைவானதாக” வகைப்படுத்தப்பட்டிருக்கும். இந்தியப் பெருங்கடல் இருமுனை (ஐ.ஓ.டி) என்று அழைக்கப்படும் மற்றொரு நிகழ்வின் கணக்கீடுதான் அதன் மதிப்பீட்டின் அடிப்படை.மேற்கு மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடலுக்கு இடையில் வெப்பநிலை மாற்றத்தை குறிக்கும் இந்த ஐ.ஒ.டியால் மழை மழை கிடைக்கும் என்று ஊகித்து, அதன் மூலம் எல் நினோவால் ஏற்படும் மழை இழப்பை ஈடு செய்யலாம் என்கிற கணக்கீடுதான் இது. ஆனால், எல் நினோவால் மழை பெரிய அளவில் குறைவதைப் போல, ஐ.ஒ.டிக்களால் பெரிய அளவில் மழை பெய்வதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 1997ல் இந்தியாவில் வலுவான எல் நினோ இருந்தது. ஆனால் நேர்மறையான ஐ.ஓ.டி காரணமாக 2 சதவீதம் கூடுதல் மழை பெய்தது. ஆனால், அந்த வருடத்திற்குப் பிறகு இரண்டு அம்சங்களும் ஒரே நேரத்தில் ஏற்படவில்லை. அதற்குப் பிறகு, இப்போதுதான் முதல் முறையாக இரண்டு காரணிகளும் ஒரே பருவ மழைக் காலத்தில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதற்கு முன்பு 2014, 2015ல்தான் பருவ மழை வழக்கத்தைவிட 10 சதவீதத்துக்கும் மேல் குறைவாகப் பெய்தது. இரண்டுமே எல்-நினோ வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மானாவாரி விவசாய மண்டலங்கள் சராசரியைவிட 92 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை பதிவுசெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிடுகிறது. தொழில்நுட்ப ரீதியாக ‘இயல்பானது’ என்று சொன்னாலும், உண்மையில் இது பெரிய மாறுபாடுதான். தவிர, நீண்ட, வறட்சியான காலகட்டத்தைத் தொடர்ந்து இடைவிடாத மழைபொழிவையும் இது குறிக்கக்கூடும். இது இப்பகுதியின் மழைக்கான ‘கணக்குகளை’ பூர்த்தி செய்ய உதவலாம், ஆனால், விவசாயத்திற்கு உதவாது. மாதிரிகள் என்ன சொன்னாலும் ஒவ்வொரு பருவமழைக்கென்று தனித்துவமான பண்புகள் இருக்கின்றன. தவிர, இடம்சார்ந்த மற்றும் தற்காலிகமான பருவமழையின் பரவலைக் கவனிப்பதும் முக்கியம். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் குறிப்பாக மத்திய இந்தியாவில் கடுமையான மழை பற்றாக்குறை விவசாய உற்பத்தியை பாதிக்க வாய்ப்பிருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நீட்டிக்கப்பட்ட வரம்பு முன்னறிவிப்புகள் மூலம் இந்த மாதத்தில் மழை பற்றிய மிகவும் துல்லியமான மதிப்பீடுகள் கிடைக்கின்றன. அவை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை முன்கணிப்பை வழங்குகின்றன. ஆற்றல் வாய்ந்ததாகவும் அவை இருக்கலாம். பருவமழை ஜூன் 4ஆம் தேதிக்குள் கேரளாவில் பெய்ய ஆரம்பிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதே தேதியில் வருமா அல்லது சற்று முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ வருகிறதா என்பது முக்கிய பருவமழை மாதங்களில் மழையின் அளவைப் பொறுத்தது. இந்த வருடம், வாய்ப்பிருக்கும் அனைத்து தகவல் தளங்களையும் பயன்படுத்தி, விவசாயிகளுக்கு துல்லியமான, சரியான நேரத்தில் தகவல்களை வழங்குவதற்கான முயற்சிகளை மாநிலங்களும் மத்திய அரசும் இரட்டிப்பாக்க வேண்டும்.

Top News Today

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.