சர்வதேச பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முயற்சிக்கும் உலகின் மிகப்பெ ரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களின் குழு, தற்போது உற்பத்தி குறைக்கப்பட்டிருப்பதை 2024 வரை நீட்டிக்க ஞாயிற்றுக்கிழமை அன்று ஒப்புக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஒபெக்+ என்று அழைக்கப்படுகிறது இந்த குழு. ஒபெக் நிறுவனமும் முன்னணி உற்பத்தியாளருமான சவுதி அரேபியாவும் ஜூலை மாதத்தில் உற்பத்தியை ஒரு நாளைக்கு கூடுதலாக 1 மில்லியன் பீப்பாய்கள் (பிபிடி) குறைக்க தானாக முன்வந்து உறுதியளித்தது. இது திங்களன்று சர்வதேச எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களை அதிகப்படுத்தியது. 20க்கும் மேற்பட்ட நாடுகளைக் கொண்ட ஒபெக்+ கூட்டமைப்பு, அதிகரித்து வரும் தேவையை எதிர்கொள்ளும் விலைகளை ஆதரிப்பதற்காக விநியோகத்தைக் குறைக்க முயற்சித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் ஒரு திடீர் நடவடிக்கையில் 1.66 மில்லியன் பிபிடி அளவிலான கூடுதல் உற்பத்திக் குறைப்புகளையும் அறிவித்தது. ஆனால், விலைகளில் அந்த நடவடிக்கையின் தாக்கம் குறுகிய காலத்துக்குதான் இருந்தது. தவிர அளவுகோலாகக் கருதப்படும் பிரெண்ட் கச்சா ஃப்யூச்சர்ஸ் பெரும்பாலும் ஒரு பீப்பாய்க்கு 80 டாலருக்கும் குறைவாகவே இருந்தது. ஏப்ரல் மாதத்தில் திடீர் உற்பத்தி குறைப்பை அடுத்து கொஞ்ச காலத்துக்கு அது 87 டாலருக்கு மேல் உயர்ந்தது. கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக இறக்குமதி செய்யும் இந்தியாவைப் பொறுத்தவரை, ஒருங்கிணைந்த சவுதி மற்றும் ஒபெக்+ விநியோகக் குறைப்பு அறிவிப்புகள் சில கவலைகளுக்கான காரணமாக இருக்கும். காரணம், இவை சர்வதேச எண்ணை விலைகளை அதிகரிக்கச் செய்ய கூடும். ஆனாலும் யுக்ரெயின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் அதன் விளைவாக ரஷ்ய எரிசக்தி ஏற்றுமதிகளுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கூர்மையாக அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு இந்தியா கொடுக்கும் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த வார இறுதி நிலவரப்படி, இந்தியாவின் கச்சா எண்ணெய் கூடையின் சராசரி மாதாந்திர விலை அதன் ஜூன் 2022 உச்சமான பீப்பாய்க்கு 116.01 டாலரிலிருந்து 72.39 டாலராக 38 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. சமீபத்திய ஒபெக்+ நடவடிக்கையின் விளைவாக சர்வதேச எண்ணெய் விலையில் நீண்டகால உயர்வுக்கு வாய்ப்பு இருக்கும் நிலையில், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா முடுக்கிவிட்டிருக்கிறது. மார்ச் மாதத்தில் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து அதன் மூன்றில் ஒரு பங்கு எண்ணெயை வாங்கியது இந்தியா. அதன் மூலம் எந்தவொரு குறிப்பிடத்தக்க பாதகமான தாக்கத்திலிருந்தும் கணிசமாக தன்னை பாதுகாத்துக் கொண்டது. ஆனாலும் கச்சா எண்ணெய் கொள்முதல் விலையில் ஏற்பட்ட சரிவு, இந்திய நுகர்வோர் வரை இன்னும் செல்லவில்லை. மத்திய, மாநில அரசுகளும், எண்ணெய் நிறுவனங்களும் எந்த வருவாயையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத நிலையில், 2022 மே 22 முதல் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. எதிர்காலத்தில் செலவுகள் அதிகரிப்பதில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கான ஒரு வழியாக இருக்கலாம். சமீபத்திய மாதங்களில் சில்லறை பணவீக்கம் குறைவதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில், நுகர்வுத் திறனில் பணவீக்க சரிவின் விளைவாக தனியார் நுகர்வு செலவினத் தரவுகளில் எந்தவொரு குறிப்பிடத்தக்க ஊக்கமும் இல்லாத நிலையில், கொள்கை வகுப்பாளர்கள் எரிபொருள் விலைகள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எரிபொருள் விலையை சீராக்க உதவும் வகையில் எண்ணெய் பொருட்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை விரைவில் நிறைவேற வாய்ப்பில்லாத சூழல்தான் இப்போது நிலவுகிறது. குறிப்பாக மாநிலங்களுக்கான வருவாய் தாக்கங்களைப் பார்க்கும் போது இது தெளிவு. இந்த நிலையில் முக்கிய போக்குவரத்து எரிபொருட்கள் மீதான வரிகளை குறைப்பதன் மூலம் மத்திய அரசு ஒரு முன்னணி நடவடிக்கையை எடுத்து பொருளாதாரத்திற்கு நிதி ஊக்கத்தை வழங்க முடியும்.
COMMents
SHARE